கெளமார மடாலயத்தில் முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா

72பார்த்தது
கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி அன்று முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெற உள்ளது.

குழந்தைகள், குடுமபங்கள், இளைஞர்கள், தற்போதையை தலைமுறை நோத் நொடி இல்லாமல் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த நாளை தேர்ந்து எடுத்து குருவணக்கம் நாளாக நடைபெற உள்ளது.

தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியம் ஊக்குவிக்கும் வகையில் குருவணக்க நாள் விழா அமையும் என ஒருங்கிணைப்பாளர் முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனர் குமாரசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை குருமூர்த்தம், திருக்கோயில் வழிபாடு, வள்ளிக் கும்மி, நடனம், மாயா ஜால நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

மேலும் மடாலயம் வளாகத்தில் கண் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, புத்தக் கண்காட்சி, இயற்கை கண்காட்சிகள் என பிற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக கெளமார மடாலயம் சார்ப்பாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி