கோவை சிறார் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு

55பார்த்தது
கோவை சிறார் உயிரிழப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை ராணுவ குடியிருப்பு பூங்காவில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுவர் பூங்காவில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்ட முருகன், சீனிவாசன், எலக்ட்ரீசியன் சிவா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும் சட்டப்பிரிவு 304(ஏ)-க் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (மே 23) மாலை ராணுவ குடியிருப்பு பூங்காவில் சிறுமியும், சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்த போது, புதைவடக்கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி