வீட்டில் இருந்தவர் மின்னல் தாக்கி பலி; மழைக்கு 13 பேர் மரணம்!

61பார்த்தது
வீட்டில் இருந்தவர் மின்னல் தாக்கி பலி; மழைக்கு 13 பேர் மரணம்!
கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தை அடுத்த பெல்லூரைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் நேற்று (மே 24) வீட்டில் இருந்துபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த வாரம் மட்டும் மழைக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளது. இதனிடையே வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து இன்று அது தீவிர புயலாக மாறி வலுவடையும். இது மேற்குவங்கம்-வங்காளதேச கடற்கரையை நோக்கி நகர்கிறது.

தொடர்புடைய செய்தி