விஜய் அரசியலுக்கு சென்றதால் திரையரங்குகளுக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் திருப்பூர் சுப்ரமணியம் பதில் அளித்துள்ளார். யார் எங்கு சென்றாலும், சினிமா தொழில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்; ஒருவர் போனால் இன்னொருவர் வந்துகொண்டுதான் இருப்பார்; இவர் இதைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறமுடியாது; விருப்பப்பட்டதை செய்கிறார்கள், அதில் நாங்கள் தலையிட முடியாது என்று அவர் தெரிவித்தார்.