கள்ளச்சாராய வழக்கில் சிப்ஸ் கடை உரிமையாளர் கைது

60பார்த்தது
கள்ளச்சாராய வழக்கில் சிப்ஸ் கடை உரிமையாளர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த நிலையில், இதில் தொடர்புடைய சிப்ஸ் கடைக்காரர் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். சக்திவேலின் ஜிஎஸ்டி எண்ணை பயன்படுத்தி மூலப்பொருளான மினரல் டர்பெண்டைன் ஆயில் வாங்கியதாக கள்ளச்சாராயத்திற்கு மெத்தனால் வாங்கிக் கொடுத்ததாக கைதான மாதேஷ் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி