பெண்ணுறுப்பில் மிளகாய் போடி தூவி சித்தரவதை

80பார்த்தது
பெண்ணுறுப்பில் மிளகாய் போடி தூவி சித்தரவதை
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரம்மா (26), பாண்டி வெங்கடேஷ் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இதனை திருப்பி தராத காரணத்தால் வெங்கடேஷின் செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை பார்த்துள்ளார். அதே செங்கல் சூளையில் ஈஸ்வரம்மாவின் சகோதரியும் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஈஸ்வரம்மா வேலை பார்க்காமல் வெளியே சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், அவரை ஒரு வாரமாக தெருவில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் கண்களிலும், பிறப்புறுப்பிலும் மிளகாய்த் தூளை வீசியிருக்கிறார். இந்த பிரச்சனை தெலங்கானா துணை முதல்வர் வரை சென்ற நிலையில் சம்பவம் தொடர்பாக அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி