ஜூலை 14 வரை மழை தொடரும்: வானிலை மையம்

66பார்த்தது
ஜூலை 14 வரை மழை தொடரும்: வானிலை மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10 முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திங்கள்கிழமை காலை 8. 30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 7 செ. மீ. , ஆவடி, சென்னை சோழிங்கநல்லூர், வால்பாறை, சின்னக்கல்லாரில் 5 செ. மீ. , மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி