ஆக. 17 முதல் தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம்: விசிக

77பார்த்தது
ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசியதாவது, வரும் 20-ம் தேதி சென்னையில் விசிக மாவட்டச் செயலாளர்கள் மட்டும் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் ஒருங்கிணைக்கப்படும்.

முடிந்த ஓராண்டு காலத்தில் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்றவர்கள், தாங்கள் ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையை கலந்தாய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கட்சி நிர்வாகத்துக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பன உள்ளிட்டவை அதில் இடம்பெற்றிருக்க வேண்டும். அதன் பின்னர் மாவட்ட நிர்வாக மறுசீரமைப்பு குறித்த செயல்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

மகளிர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். பெரியார் பிறந்தநாளான செப். 17 அந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் மாநாடு நடைபெறும். இது விசிக வரலாற்றில் மைல் கல்லாக அமையும். இதற்கிடையே, கட்சி அங்கீகாரம் பெற்றதையொட்டி, நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைக்கவும் எண்ணியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி