காதலியின் திருமணத்தை தடுக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது

540பார்த்தது
காதலியின் திருமணத்தை தடுக்க முயற்சி: முன்னாள் காதலன் கைது
சென்னை அரும்பாக்கம் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது; நான், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 5 வருடத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி(24) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதன்பிறகு பாலாஜி மீது சந்தேகம் ஏற்பட்டதுடன் அவரது நடவடிக்கை சரியில்லாததால் கடந்த 2 வருடமாக பேசுவதை நிறுத்தி விட்டேன்.

இதன்பிறகு எனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதுபற்றி தெரிந்த பாலாஜி எனக்கு தினமும் போன் செய்து ‘’என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால் முன்பே நம்ப காதல் செய்தபோது எடுத்த போட்டோக்களை நிச்சயதார்த்தம் ஆன மாப்பிள்ளைக்கு அனுப்பி விடுவேன்’’ என்று மிரட்டியதுடன் அந்த படங்களை மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி உள்ளார். இதனால் எனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. என்னை மிரட்டிவரும் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின்படி, அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்ததுடன் அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு பாலாஜி வரவழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாலாஜி கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி