வாலிபர் குத்திக் கொலை: 3 பேர் கைது

78பார்த்தது
வாலிபர் குத்திக் கொலை: 3 பேர் கைது
திருவொற்றியூரில் வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3 பேரை கைது செய்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்தவர் சோபன்குமார். இவர் புறா வளர்த்து வந்துள்ளார்.

தற்போது சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்திருந்தார். நேற்று திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நடைபெற்ற ஐயப்ப பூஜையில் கலந்துகொள்வதற்காக கே. சி. பி சாலை வழியாக நடந்து சென்றுள்ளார்.

சோபனின் நண்பர் பிரசாத் குடிபோதையில் வந்துள்ளார். இவர்கள் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்த காரணத்தால் அந்த பிரச்னையை பேசி இரண்டு பேரும் வாக்குவாதம் செய்துள்ளனர்.

அங்கு கிடந்த பீர்பாட்டிலை சோபன் எடுத்து பிரசாத் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டுஓடிவிட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்துகொண்டிருந்த பிரசாத்தை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பிரசாத்தின் நண்பர்கள் ஜோதிபாசு (26), சுரேஷ் (23), நிர்மல்குமார் (22) ஆகியோர் கையில் பெரிய கத்தி, அரிவாள்களுடன் வந்து நண்பரை தாக்கிய சோபனை தேடியுள்ளனர். அந்த சமயத்தில், திருவொற்றியூர் மேற்கு மாடவீதி அருகில் சோபன் நிற்பதாக கிடைத்த தகவல்படி அங்கு சென்று சுற்றிவளைத்து சோபனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது ஜோதிபாசு தன்னிடம் இருந்த கத்தியால் சோபன் கழுத்தில் சரமாரியாக குத்தியதில் சோபன் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி