தமிழக கல்லூரி மாணவர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமல்லாமல், 2ஆம், 3ஆம் ஆண்டு மாணவர்களும் கடன் பெறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.