மழைநீரை மிதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி

66பார்த்தது
மழைநீரை மிதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி
கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 73வது தெருவைச் சேர்ந்தவர் மனோஜ், 22. இவர், காலையில் பால் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையில், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 6வது பிரதான சாலையில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், தேங்கி இருந்த மழைநீரில் இருந்து, மின்சாரம் பாய்ந்து மனோஜ் கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.


கொடுங்கையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி