சென்னையில் தொடர் சோதனை: சிக்கிய 11 பேர் கைது

3670பார்த்தது
சென்னையில் தொடர் சோதனை: சிக்கிய 11 பேர் கைது
கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 நபர்கள் கைது. 5. 3 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 750 கிராம் மாவா பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 27. 12. 2023 முதல் 02. 01. 2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 5. 3 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 750 கிராம் மாவா, 1 செல்போன், பணம் 18, 400/- மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி