13, 14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்

70பார்த்தது
13, 14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்
கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் அடையார், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தேவையற்ற பழையபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு தேவையற்ற பொருள், மற்றவர்களுக்கு பயனுள்ள பொருளாக உள்ளன.

அதனால் பழைய பொருட்களை, தேவையானவர்களிடம் பெற்று, அவை குப்பைக்கு செல்வதைதடுக்கும் நோக்கில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் 3 இடங்களில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி