தியாகராய நகர் - Thiyagarayanagar

சென்னை: மின்சாரத்தை ரூ. 20க்கு வாங்குவதை ஏற்க முடியாது - அன்புமணி

சென்னை: மின்சாரத்தை ரூ. 20க்கு வாங்குவதை ஏற்க முடியாது - அன்புமணி

நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மின்பற்றாக்குறையை சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ. 20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ. 20க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதே நிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது. எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
Feb 12, 2025, 08:02 IST/

"நாங்க போட்ட பிச்சை” - நகர்மன்ற தலைவருடன் கவுன்சிலர்கள் ஆவேசம்

Feb 12, 2025, 08:02 IST
தென்காசி: செங்கோட்டை நகராட்சியில் இன்று (பிப்.,12) நகர்மன்ற தலைவர் ராமலக்ஷ்மி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கருத்துக்கு எதிராக அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால், நகர்மன்ற தலைவர் ராமலக்ஷ்மி, கூட்டத்தை விட்டு வெளியேறினார். அங்கிருந்த கவுன்சிலர்கள் அவரை வழிமறித்து, “உங்க பதவி நாங்க போட்ட பிச்சை” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு ராமலக்ஷ்மி வெளியேறியதாக கூறப்படுகிறது. நன்றி: polimernews