குமரியில் புதிய தலைவர்கள் நியமனம்: பாஜக அறிவுறுத்தல்

56பார்த்தது
கன்னியாகுமரி மாவட்ட பாஜகவுக்கு கிழக்கு, மேற்கு மாவட்ட புதிய தலைவர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். பொது வாழ்க்கையில் நேர்மை உடைய குற்றப் பின்னணி இல்லாதவர்களை தேர்வு செய்ய கட்சியினர் அறிவுறுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அனைத்து கட்சியினரும் முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாம் தமிழர் என பல கட்சியினரும் பணிகளை முடித்துவிட்டிருக்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ள பாஜகவும் சட்டப்பேரவை தேர்தலில் இடங்களை பிடிக்கும் வகையில் வியூகம் அமைத்து வருகிறது. 

இதற்காக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக கிழக்கு மாவட்டத்துக்கும், மேற்கு மாவட்டத்துக்கும் பாஜகவில் உள்ள சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவை கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நேர்மையற்றவர்கள் பாஜகவில் தலைவர்களாக வந்தால், வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது சிரமம். பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள குமரி மாவட்டத்தில் கட்சி செல்வாக்கு பாதியாக சரிவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே நேர்மையானவர்களை குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என பாஜகவினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி