அண்ணாமலை மீது மதுரை மாவட்ட தலைவர் அதிருப்தி

70பார்த்தது
அண்ணாமலை மீது மதுரை மாவட்ட தலைவர் அதிருப்தி
மதுரை பாஜகவில் 200 நிர்வாகிகள் நீக்கப்பட்டது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காத மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது மாநகர் மாவட்ட பாஜக தலைவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை மாநகர் பாஜக தலைவர் மகா. சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக தலைவர்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டர்களை தேர்வு செய்து பல்வேறு பொறுப்புகளை கொடுத்து அலங்கரிக்கின்றனர்.

இதை சரியாக பயன்படுத்திவர்கள் குடியரசு தலைவர் பதவி வரை பெற்றுள்ளனர். ஆனால், மதுரை வருவாய் மாவட்டத்தில் சில முக்கிய நிர்வாகிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்படுவதுடன் தங்களை சிவனும், பார்வதியும் நேரடியாக பதவியில் அமர்த்தியதாக நினைத்துக் கொண்டு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுக்குள் 200 பேரை பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளனர். கட்சிக்கொடியை காரில் கட்டக்கூடாது என போலீஸில் புகார் செய்து கழற்ற செய்துள்ளனர்.

எல்லா இடங்களிலும் பாஜக, எல்லோரிடத்திலும் தாமரை என்ற கோஷத்தை பாஜக ஊட்டி வளர்த்து வருவதை கூட மறந்து தொண்டர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது கட்சி சித்தாந்தத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் எதிரானது. இது தெரிந்தும் மாநில தலைமை தொடர்ந்து மவுனமாக இருப்பது உழைத்த தொண்டர்களின் மன வேதனையை உச்சமாக்கி வருகிறது. எனவே, இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தொண்டர்களுக்கு மாநில தலைமை குழு அமைத்து ஆறுதல் கூற முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி