சென்னையில் 23-வது மகளிர் கார் பேரணி

54பார்த்தது
சென்னையில் 23-வது மகளிர் கார் பேரணி
சென்னையில் நடைபெற்ற கார் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் விதவிதமான உடைகளில் பங்கேற்றனர். இந்தியன் ஆயில் நிறுவனம், டச்சஸ் கிளப் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மகளிர் கார் பேரணி, சென்னையில் ‘மெட்ராஸ் - மெட்ராஸ்’ என்ற மையக் கருத்துடன் நேற்று நடைபெற்றது.

மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டல் வளாகத்தில், 23-வது கார்பேரணியை ஓட்டல் நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ். எம். வைத்யா, செயல் இயக்குநர் எம். சுதாகர், நடிகர் அருண் விஜய், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. போட்டி விதிகளின்படி ஒவ்வொருகாரிலும் மொத்தம் 4 பேர் இருந்தனர். ஒருவர் காரை ஓட்ட, மற்றொருவர் வழிகாட்டியாக இருந்தார். மற்ற இருவரும் கொடுக்கப்பட்ட விநாடி-வினா போட்டிக்கான விடைகளை தேடினர். 30-40கி. மீ. வேகத்தை தாண்டக் கூடாது.

தொடர்புடைய செய்தி