பல்வேறு திட்ட பணிகள் செய்துள்ளேன்: திமுக வேட்பாளர்

67பார்த்தது
பல்வேறு திட்ட பணிகள் செய்துள்ளேன்: திமுக வேட்பாளர்
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம், ஆர். கே. நகர், பெரம்பூர், திருவொற்றியூர், திருவிக நகர், கொளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், கடந்த 5 ஆண்டுகளில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வடசென்னை தொகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதி, சென்னை மாநகராட்சி நிதி ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன். குறிப்பாக, பேருந்து நிழற்குடை, சமுதாய நலக்கூடங்கள், அங்கன்வாடி மையம், மாநகராட்சி பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, ரேஷன் கடைகள், பல்நோக்கு கட்டிடங்கள், மாநகராட்சி பள்ளியில் புதிதாக வகுப்பறைகள், பூங்காக்கள் நவீனப்படுத்துதல், உடற்பயிற்சி கூடங்கள், ரயில்வே சுரங்கப்பாதை, ரயில்வே மேம்பாலங்கள், நூலகங்கள் என பல்வேறு திட்ட பணிகளை ₹19 கோடி மதிப்பீட்டில் செய்துள்ளேன். முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். உதாரணமாக காலை சிற்றுண்டி திட்டம், மகளிர்கள் இலவச பேருந்து திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம், செயல்படுத்தி வருகிறார். வெள்ளம் பாதிக்கப்பட்டபோது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினேன்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி