மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் காவலர்கள், விடுமுறை முடிந்த பிறகு தங்களது கணவர் அல்லது பெற்றோர் வசிக்கும் பகுதிகளில் பணியமர்த்தப்படுவார் என்று முதல்வர் ஸ்டாலின் அதற்கான அறிவிப்பு ஆணையை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் பணியாற்றும் 19 பேருக்கு, அவர்களின் விருப்பப் பகுதிக்கு இடமாற்றம் செய்து அதற்கான ஆணையை காவல் ஆணையர் அருண் இன்று (செப்.,25) வழங்கினார்.