நாளை சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்

53பார்த்தது
நாளை சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்
சட்டப்பேரவையில் துறைகள் தோறும் மானிய கோரிக்கை விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படாமல், சட்டப்பேரவை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், கடந்த ஜூன் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, மானிய கோரிக்கைகள் விவாதத்துக்காக ஜூன் 24-ம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, மானிய கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனைநாட்கள் நடத்துவது என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை பகல் 12 மணிக்கு பேரவைத்தலைவர் மு. அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு. க. ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கொறடா உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில், எத்தனை நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பேரவைத்தலைவர் வெளியிடுவார்.

தொடர்புடைய செய்தி