விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி - ஆர். எஸ். பாரதி கருத்து

57பார்த்தது
கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர். வெற்றி தேடித்தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலைப் பெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக, சென்னையில் யாரும் எதிர்ப்பாராமல் நடந்த ஒரு கொலைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. அதையும் இந்த தேர்தலில் அரசியலாக்க முயற்சித்தார்கள். இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சி, 3 ஆண்டு கால ஆட்சி நடத்திய முறையை மக்கள் ஏற்றுக்கொண்டு, யார் என்ன சொன்னாலும், யார் எதிர்த்தாலும், தூற்றினாலும், நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த மகத்தான வெற்றியைத் தேடிக் கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி