மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

79பார்த்தது
மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு 5 நாள்களுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலில் இன்று முதல் 20ஆம் தேதி வரை சூறாவளி மணிக்கு 40-45 கி. மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி. மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அங்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி