அதிக புரதச்சத்துடன் தயிர் பாக்கெட்கள்: ஆவின் நிறுவனம் திட்டம்

62பார்த்தது
அதிக புரதச்சத்துடன் தயிர் பாக்கெட்கள்: ஆவின் நிறுவனம் திட்டம்
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி 34 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் பதப்படுத்தப்பட்டு ஆரஞ்சு, பச்சை, நீலம், ஊதா நிறப் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது.

இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 200-க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து விற்பனை செய்கிறது. இந்நிலையில், அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி