டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ. 400 கோடிக்கு மது விற்பனை

60பார்த்தது
டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ. 400 கோடிக்கு மது விற்பனை
டாஸ்மாக் கடைகளில் நேற்று ரூ. 400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று மதியம் முதலே மதுப்பிரியர்கள் 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: நேற்று ஒரே நாளில் மட்டும் வழக்கமான விற்பனையை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது. டாஸ்மாக் கடைகளில் தினசரி மது விற்பனை ரூ. 150 கோடி அளவுக்கு இருக்கும், நேற்று இரண்டரை மடங்கு அளவுக்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதால் ரூ. 400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி