சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்

64பார்த்தது
சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கரை, தேனியில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் கடந்த 4-ம் தேதி கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கிய நிலையில் காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரை மே 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி