முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை பேசியதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில், எதிர்காலத்தில் இது போன்று பேசாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சட்டத்துறை அமைச்சர் என்கிற முறையில் சி.வி.சண்முகம் கவனமாக பேச வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.