மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். அவரின் இளைய சகோதரர் சண்முக பாண்டியன் தொகுதியில் பல இடங்களில் அண்ணனுக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். இந்நிலையில் உரிய அனுமதியின்றி தெப்பக்குளம் அருகில் பிரசாரம் செய்தாக சண்முக பாண்டியன், நடிகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 14 பேர் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.