கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு நேரத்தில் பயங்கர கார் விபத்து
நடந்துள்ளது. இரவு நேரத்தில் சாலையில் சென்ற கனரக வாகனத்தை அதிவேகமாக வந்த கார் ஒன்று முந்த முயன்றது அப்போது எதிரே வந்த காரின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.