“மே மாதம் நடந்த நீட் தேர்வு ரத்து?” - உச்ச நீதிமன்றம்

72பார்த்தது
“மே மாதம் நடந்த நீட் தேர்வு ரத்து?” - உச்ச நீதிமன்றம்
கடந்த மே மாதம் 5ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நீட் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இந்த நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் நீட் தேர்வு எழுதியவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி