சாலையில் சென்ற நபரை குத்திக் கொன்ற காளை (வீடியோ)

94197பார்த்தது
தெற்கு டெல்லியின் நெப் சராய் காவல் நிலையப் பகுதியில் நேற்று ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் தனது மகனை பள்ளி வேனில் ஏற்றி விட்டுவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த காளை மாடு ஒன்று தாக்கியது. கொம்புகளால் குத்தி, கண்மூடித்தனமாக கால்களால் அவரது முகத்தில் உதைத்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி