பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கும் என் மண், என் மக்கள் பயணத்தின் நிறைவு நாள் விழா, வரும் பிப்ரவரி 27 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறவிருக்கிறது. தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுத்தும் இந்த மாபெரும் மாநாட்டின் ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை வரவேற்க தமிழகம் ஆவலுடன் காத்திருக்கிறது என எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியுள்ளார்.