பாகிஸ்தானின் டிரோன்களை பறிமுதல் செய்த பிஎஸ்எப்

62பார்த்தது
பாகிஸ்தானின் டிரோன்களை பறிமுதல் செய்த பிஎஸ்எப்
பஞ்சாபின் டர்ன் தரான் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களை கைப்பற்றியதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜூன் 20 அன்று, பாகிஸ்தானில் இருந்து அனுப்பிய ளில்லா விமானங்களை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தி பிடித்தனர். இவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று விளக்கமளித்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்துடன் டர்ன் தரன் மாவட்டத்திலும் ஆளில்லா விமானங்கள் பிடிபட்டன.

தொடர்புடைய செய்தி