BREAKING: பல்லாவரம் எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது

61964பார்த்தது
BREAKING: பல்லாவரம் எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள், தனது வீட்டில் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று கொடுமை செய்ததாக எழுந்தது. இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாக்கினர். இதையடுத்து இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி