BREAKING: சேகர்பாபு சென்ற கார் மீது தாக்குதல்

91673பார்த்தது
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு சென்ற கார் மீதி அதிமுகவினர் கொடிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்பு மனுத்தாக்கல் நிகழ்விற்கு சென்று திரும்பியபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. யார் முதலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும் என அதிமுக மற்றும் திமுக இடையே வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்தையடுத்து வெளியே வந்த அமைச்சர் கார் மீது அதிமுகவினர் கொடியை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அதிமுகவினர் மீது திமுகவினர் பதில் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி