அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

73பார்த்தது
அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று (ஜுலை 3) மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழு தீவிர சோதனை நடத்தியது. ஆனால் அது புரளி என தெரிவந்ததை அடுத்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கல்வி நிலையங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி