கணவனை பங்குப்போட்ட பெண்ணுக்கு கத்திக்குத்து

2569பார்த்தது
கணவனை பங்குப்போட்ட பெண்ணுக்கு கத்திக்குத்து
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சௌந்தரி. ஆறுமுகத்திற்கு வள்ளி என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த சௌந்தரி, கணவர் ஆறுமுகம் மற்றும் வள்ளியிடம் உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் வள்ளி சௌந்தரியை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சௌந்தரி, கத்தியால் வள்ளியை குத்தியுள்ளார். வள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சௌந்தரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி