பீகாரில் சமீபத்தில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்தனர். அதன்பின், அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் இறந்தவரின் உடலை எடுத்து வந்து கால்வாயில் வீசினர். இந்த சம்பவம் முசாபர்பூரில் நடந்ததாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல்துறையினரின் இந்த கொடூர நடவடிக்கைக்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.