மக்களை பிளவுபடுத்த துடிக்கிறது பாஜக!

78பார்த்தது
மக்களை பிளவுபடுத்த துடிக்கிறது பாஜக!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியிருப்பதன் மூலம் பொதுமக்களைப் பிளவுபடுத்தி, இறையாண்மையைச் சிதைக்க பாஜக துடிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சி அமையுமானால், என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்தச் சட்டம் என்ற கூற்று உண்மையானால், இலங்கைத் தமிழர்களைப் பட்டியலில் சேர்க்காதது ஏன்? மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம். தேசம் காப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி