தண்டவாளத்தில் தொடங்கிய வாழ்க்கை: பிரதமர் உருக்கம்

68பார்த்தது
தண்டவாளத்தில் தொடங்கிய வாழ்க்கை: பிரதமர் உருக்கம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 10 வந்தே பாரத் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனது வாழ்க்கை ரயில் தண்டவாளத்தில் தொடங்கியது. நான் எனது வாழ்க்கையை ரயில் பாதைக்கு அருகில் தான் தொடங்கினேன் எனவே ரயில்வே துறை எவ்வளவு மோசமானதாக இருந்தது என்பது எனக்கு தெரியும். ஆட்சிக்கு வந்தது முதல், இந்திய ரயில்வேயின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறேன் என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் ரயில்வே துறைக்கு என்று இருந்த தனி பட்ஜெட் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி