சாலையில் பயணிக்கும்போது, எந்தப் பக்கத்திலிருந்து எந்த ஆபத்து வரும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் அந்த விபத்துகளில் உயிர் பலியாகும் சம்பவங்களும் உண்டு. சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது, நீலகாய் (கடமான் போன்ற விலங்கு) மோதியதில் முகேஷ் பாண்டே என்ற 28 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.