ஓசியில் ஜிலேபி தராததால் சரமாரி தாக்குதல் (வீடியோ)

50535பார்த்தது
தூத்துக்குடி வீ.இ ரோட்டில் நாகர்கோவிலை சேர்ந்த முருகன் என்பவர், ‘ஸ்ரீ சிந்து’ என்ற பெயரில் சிப்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இந்த கடையின் அருகே இருக்கும் மதுபான கடாயில் குடித்துவிட்டு வெளியே வந்த 4 பேர் ஓசியில் ஜிலேபி வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு குமார் பணம் இல்லாமல் குடுக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர். இதனை கண்ட மற்ற வியாபாரிகள் அங்கு வந்து சண்டையை தடுத்து நிறுத்தினர். சண்டையில் காயமடைந்த குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் அந்த 4 பேரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி