2 ஆயிரம் எருமைகளை தத்தெடுத்த ஆவின்

83பார்த்தது
2 ஆயிரம் எருமைகளை தத்தெடுத்த ஆவின்
தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் எருமைகளை தத்தெடுக்க ரூ.8.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கொழுப்பு சத்து நிறைந்த பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பால் பண்ணைகளில் இருந்து 2 ஆயிரம் எருமை கன்றுகளை தத்தெடுத்துள்ளது ஆவின் நிறுவனம். தமிழகத்தில் எருமைகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எருமைகளின் எண்ணிக்கையை பெருக்கவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.