ஆட்டோ, மினி வேன் மோதல் - 8 பேர் பலி

62பார்த்தது
ஆட்டோ, மினி வேன் மோதல் - 8 பேர் பலி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் மினி வேன் மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யாணை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த மினி வேன் புனே மாவட்டம் பிம்பல்கான் ஜோகாவிற்கு வந்தபோது தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி