ஆம்ஸ்ட்ராங் படுகொலை- பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

587பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் படுகொலை- பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
பிஎஸ்பியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தீவிரமாக தேடப்படும் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த திருமதி.அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்" என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி