நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

64பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுரு தலைமையில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டதோடு, கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும், கட்சி நிர்வாகிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி குறைபாடுகளை கலைந்திட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து கட்சியில் உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு கிராமத்திலும் கட்சியின் கிளைகளை உருவாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் நான்கு ரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே உள்ள கட்சியின் கொடிக்கம்பத்தில், கட்சிக் கொடியேற்றிய கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி