3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை: அரியலூரில் சோகம்

10554பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு அருகே உள்ள  வளவனேரி கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி பானுமதி, ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி பானுமதி மற்றும் 7 ஆம் வகுப்பு  படிக்கும் மகன் பிரசாத் மேலும் 2 வயது இரட்டை குழந்தைகளான சாத்விக், சாத்விகா, ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்து இரண்டு நாட்களாக வீடு பூட்டி இருந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பகுதி மக்கள் மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்‌. சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபொழுது வீடு உள் பக்கமாக கதவு பூட்டி இருந்த நிலையில் கதவை உடைத்து பார்த்த போது மூன்று குழந்தைகள் தரையிலும்  தாய்  பானுமதி தூக்கிலும் தொங்கிய நிலையில் இறந்து  கிடந்துள்ளார்.

இதையடுத்து பானுமதி, சாத்விக், சாத்விகா, பிரசாத் ஆகிய நான்கு பேரின் உடலை கைப்பற்றி  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலையா? கொலையா? இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி