நான்கு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர் கைது

2922பார்த்தது
நான்கு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பெரம்பலூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் இரவு ரோந்து பணி மேற்கொண்ட போது அதிகாலை 04. 00 மணியளவில் பெரம்பலூர் உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் இரும்பு கம்பியை எடுத்து வீசிவிட்டு தப்ப முயன்றவரை பிடித்து விசாரணை செய்த போது பெரம்பலூர் அடுத்துள்ள ரங்கநாதபுரம், மாரியம்மன் கோவில் தெரு, சோலைமுத்து மகன், மணிகண்டன் (எ) வேட்டை மணி வயது -26 என தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து விசாரணை செய்தபோது இவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மூன்று திருட்டு வழக்குகள் மற்றும் மருவத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு திருட்டு வழக்கு என நான்கு வழக்குகளிலும் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது, என்னை தொடர்ந்து பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி குற்றவாளி மீது மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து நான்கு திருட்டு வழக்குகளிலும் தொடர்புடைய 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்த பெரம்பலூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் குற்றவாளியை நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி