3 இந்திய பெண்கள் அமெரிக்காவில் மரணம்

72பார்த்தது
3 இந்திய பெண்கள் அமெரிக்காவில் மரணம்
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ஹாபென் படேல், சங்கீதாபென் படேல், மனீஷாபென் படேல். இவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது சாண்டோன் பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இவர்களின் கார் சாலை தடுப்பில் மோதி 4 வழிசாலையை கடந்து 20 அடி உயரத்திற்கு பறந்து சாலையின் மறுபுறம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென் ஆகிய 3 இந்திய பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி