அரியலூரில் நடந்த அபூர்வ நிகழ்வு: சிவாலயத்தில் திரண்ட பக்தர்கள்

3665பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இவ்சிவாலயத்தில்
இக்கோவிலில் சித்திரை மற்றும் கார்த்திகை மாதங்களில் ஆண்டுக்கு இரு முறை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி சித்திரை மாத தொடங்கி விட்டதையடுத்து, லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு இன்று நடந்தது.

சித்திரை மாதத்தில் சூரியபகவான் லிங்கத்தை வளம் வந்து ஈசனை வழிபட்டு செல்வதாக ஐதீகம். இந்த நிகழ்வானது சுமார் பத்து நிமிடம் நீடித்தது. சூரியனிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். ‌ இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி